கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பாஜ தொண்டரின் தாயார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து பலியான போது ஏன் குரல் கொடுக்கவில்லை என மம்தா கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கு வங்க மாநிலம், 24பர்கானாஸ் மாவட்டத்துக்குட்பட்ட நிம்தா பகுதியை சேர்ந்த பாஜ தொண்டரின் வீட்டின் மீது பிப்ரவரி 27ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாஜ தொண்டரின் 82 வயது தாய் காயமடைந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷோவா முஜூம்தர் ஜீ நேற்று உயிரிழந்தார். மூதாட்டி இறந்ததை அடுத்து நிம்தா காவல்நிலையம் முன் பாஜ தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட்டர் பதிவில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் மேற்கு வங்கத்தின் மகள் முஜூம்தர் ஜீயின் காயமடைந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியும் வேதனையும் நீண்ட காலத்துக்கு மம்தா சகோதரிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வன்முறை இல்லா மேற்கு வங்கத்தை உருவாக்க பாஜ பாடுபடும். மாநிலத்தில் உள்ள நமது சகோதரிகள், தாய்மார்களின் பாதுகாப்புக்காக மேற்கு வங்கம் போராடும்” என குறிப்பிட்டுள்ளார்.